Pages

செட்டிலானதுக்கப்புறம் மேரேஜ்







முதலிலேயே டிஸ்கி போட்டுக்கிறேன்:
இந்த எனது பதிவு, திருமணங்கள் குறித்த ஒரு அலசல் மட்டுமே. இதன் மூலம் நான் பால்ய விவாகம், வரதட்சணை, பெண்ணடிமைத்தனம் போன்ற எதையும் நான் முன்பும் ஆதரித்ததில்லை; இப்பவும் ஆதரிக்கவில்லை என்பதைக் கொஞ்சம் ஸ்ட்ராங்காவே சொல்லிக்கிறேன்!!

(செட்டில் ஆயிட்டோம், ஆனாலும் வீட்டில கல்யாணப் பேச்சு எடுக்க மாட்டேங்கிறாங்களேன்னு புலம்புறவங்க இந்தப் பதிவை வீட்டில காட்டுங்க, ஒரு வேளை வொர்க் அவுட் ஆகலாம்!!)

இப்ப கொஞ்ச வருடங்களாகவே இளைஞர்களிடம் நிலவி வரும் டிரெண்ட் என்னன்னு பாத்தோம்னா, படித்து முடித்தவுடன் முதலில் வேலை, அப்புறம் ஒரு வண்டி, நல்ல ஏரியாவில ஒரு வீடு, கொஞ்சம் பேங்க் பேலன்ஸ் இப்படி செட்டில் ஆனபிறகுதான் கல்யாணம் அப்படிங்கிறதுல உறுதியா இருக்காங்க. ஆண்கள் மட்டுமில்லை, பெண்களும் அப்படித்தான் இருக்காங்க. இக்கால நிலையற்ற உறவுகள் இந்தக் காரணங்களை நியாயப்படுத்துகின்றன.

அதிலயும் இப்ப அநேகமா எல்லாருமே ஒரு முதுநிலைப் பட்டமும் வேலைக்கு ரொம்ப உதவும்னு படிக்கிறதால அதுக்கும் சில வருடங்கள் பிடிக்கிறது. முதுநிலை படிப்புக்குத் தேவையான நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதற்கும் ஒரு குறிப்பிட்ட காலம் பிடிக்கிறது. அப்படி, இப்படின்னு ஒரு 28, 29 வயசில கொஞ்சம் செட்டில் ஆனாலும் இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருப்பாங்க. இதில யூ.எஸ்., கனடா, ஆஸ்திரேலியான்னு ஏதாவது ஒரு சிட்டிஸன்ஷிப் வாங்கினப்புறம்தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம் புடிக்கிறவங்களும் இருக்காங்க.

இப்படி எல்லாம் சரியா வந்து, கல்யாணம் பண்ணும்போது, ஆணுக்கு 30 வயது தாண்டிவிடுகிறது. பெண் முப்பது வயதைச் சில வருடங்களில்/மாதங்களில் எட்டிப் பிடிக்கிறவர்களாக இருப்பார்கள். மணமக்களின் பெற்றோர்களோ 60+ வயதுகளில் இருப்பார்கள்.

ஒரு பதினைஞ்சு, இருபது வருஷத்துக்கு முன்னாடி பாத்தோம்னா, ஆண்கள் படிச்சு ஒரு வேலை கிடைச்சவுடனேவும், பெண்கள் படிச்சு முடிச்சவுடனேவும் கல்யாணம் பண்ணிகிடுவாங்க. கல்யாண வாழ்க்கையை தங்கள் வருமானம் மற்றும் பெற்றோர் ஆதரவுடன் நடத்தி வந்தனர். இந்த கல்யாணங்களில் மணமக்களின் பெற்றோரும் நடுத்தர வயதைத் தாண்டி இருப்பார்கள். பெண்ணும் வேலை பார்த்தால் குழந்தை வளர்ப்பில் மிகவும் உதவியாக இருப்பார்கள்.

அதுக்கும் முன்னாடி, அதாவது ஒரு 30-40 வருஷம் முன்னாடி போனா, ஆண்கள் கல்லூரியில படிச்சுகிட்டிருக்கும்போதும், பெண்கள் 15-18 வயசிலயும் கல்யாணம் பண்ணினாங்க. ஆணின் கல்யாணத்தின் பின் உள்ள வாழ்க்கைக்கு அவரது பெற்றோர் ஆதரவாக இருந்தனர். ஆண்களுக்கு வேலை கிடைத்து செட்டில் ஆகும்போது பெற்றோர் நடுத்தர வயதைக்கூட எட்டியிருக்கமாட்டார்கள். இந்த கல்யாணங்களில் பொதுவா ஆணுக்கே 20 வயதுக்குள்தான் இருக்கும். அவனின் படிப்புச் செலவு, மனைவி, குழந்தைகளுக்கான செலவு எல்லாமே அவனது குடும்பத்தினரால் (சில சமயம் பெண் வீட்டாராலும்) அளிக்கப்படும். அவன் வேலையில் சேரும்போது குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் இருப்பார்கள். (சில வீடுகளில் ஒரே நேரத்தில் அப்பா கல்லூரியிலும், மகன் பள்ளியிலும் படித்தும் இருக்கிறார்கள்).

ஒன்றிரண்டு தலைமுறை முன் பார்த்தோமானால், பேரன்/பேத்திகளின் திருமணத்தை முடிவு செய்து, நடத்தி வைப்பதுகூட தாத்தாவாகத்தான் இருக்கும். தாய், தந்தைக்கு அவ்வளவு அதிகாரம்/ சுதந்திரம் இருக்காது.அந்தளவு கூட்டுக்குடும்பம் சக்திவாய்ந்ததாக இருந்தது.

அதாவது இவ்விரண்டு கால கட்டங்களிலும் பருவ வயது வந்தவுடன் திருமணம் செய்யும் வாய்ப்பு இருந்தது. அதனால் தவறுகள் குறைவாகவே இருந்தன. தவறுகள் என்று நான் சொல்வது, அறியாப்பருவக் காதல், கல்யாணத்திற்கு முன்பே தவறான உறவு போன்றவற்றை. இந்த வயதில் எதிர்பாலர் குறித்த ஈர்ப்பு, ஆர்வம் அதிகம் இருக்கும். அதை ஈடுகட்டத்தான் அந்த காலத்தில் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர் போலும். பின், அதனால் பாதிப்புகள் அதிகமாக விளையத் தொடங்கியதால் (பால்ய விதவைகள், பிரசவ மரணங்கள் போன்றவை) வரும் காலங்களில் திருமண வயது அதிகரிக்கப்பட்டது.

அதன்பின்னரும் வரதட்சணை, மாமியார் கொடுமை, இளவயதுப் பிரசவங்கள் போன்ற பல காரணங்களால் பெண்கள் அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகியதால், படித்து ஒரு பட்டம் பெற்ற பின்னரே பெண்கள் திருமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இக்கால கட்டங்களில் நகரக் குடியேற்றம் அதிகரித்த காரணத்தாலும் கூட்டுக்குடும்ப முறை சிதைய ஆரம்பித்தது.

முன்னர் ஒரு பெண் திருமணத்திற்குப் பின் பிரச்னை ஏற்பட்டு பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்தால் ஆதரிக்க பெற்றோரும், சகோதரர்களும் தயாராய் இருந்தனர். கூட்டுக்குடும்ப முறை குறைந்ததில் இதற்கும் பாதிப்பு ஏற்பட்டது. திருமண வயது அதிகரித்ததால் பெற்றோரும் வயதானவர்களாக ஆகி, மகனின் ஆதரவில் இருக்கும்போது, மண வாழ்விழந்த மகளைச் சரியாகப் பராமரிக்க முடியாமல் தவித்தனர். ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசியில் பெற்றோரைப் பராமரிப்பதே சிரமமாகிப் போன நிலையில் மகன்கள், சகோதரிகளையும் பராமரிக்கத் திணறினர். இம்மாதிரிச் சூழ்நிலைகள் பெண்கள் வேலைக்குச் சேர்ந்து காலூன்றிய பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்திற்கு வலுவேற்றின. இது பெண்களின் திருமண வயதை இன்னும் அதிகப் படுத்தியது.

ஆண்களின் நிலையைப் பார்த்தால், விலைவாசி உயர்வு, குடும்பப் பொறுப்புகள் கூடிப்போனது, வரதட்சணை எதிர்ப்பு ஆகியவை அவர்களின் பணத்தேவையை அதிகப் படுத்தின. அதனால் அவர்களும் மேலே சொன்னமாதிரி படிப்பு, மேற்படிப்பு, வேலை, அயல்நாட்டுக் குடியுரிமை என்று திருமண வயதை தங்கள் பங்குக்கு ஏற்றிக் கொண்டார்கள்.

தற்போதைய நிலவரப்படி இந்தியர்களும் வெள்ளைக்காரர்களைப் போல் வயதான பிறகு திருமணம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். கேட்டால், கொஞ்ச நாளாவது லைஃபை எஞ்ஜாய் செய்ய வேண்டும், அதற்குள்ளே திருமணமா என்கிறார்கள். ஆனால், இந்த வயதில் வரும் உடல் வேட்கையை அடக்க முடியாமல் தவறான வழிகளில் போகிறார்கள். சிலர் லிவிங் டுகெதர் என்ற முறையிலும் வாழ்கிறார்கள்.

இவ்வாறு திருமணத்தை இக்காலத்தில் இருபாலரும் வெறுப்பதன் காரணமென்ன? “Afraid to take responsibilities" அதாவது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதால் வரும் பிரச்னைகளை எதிர்கொள்ள அச்சம், அதிவசதியான வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம், வறுமையை எதிர்கொள்ள பயம் போன்ற பல காரணங்களைக் கூறலாம். சிலரிடம் கேட்டால் சொல்வார்கள், ”நானும், என் குடும்பமும் வசதியாக இருக்கவேண்டும். என் பிள்ளைகளையும் வசதியாக வளர்க்க வேண்டும். நான் பட்ட கஷ்டங்கள் படக்கூடாது. அதற்குத் தேவையான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்ட பின்னர்தான் திருமணம் பற்றி யோசிக்க வேண்டும்” என்று. நல்ல முறையில் குடும்பத்தைப் பேண நினைக்கும் பொறுப்பானவர் என்ற முறையில் அவரின் எண்ணம் சரியே.

ஆனால், இதன் உள்ளர்த்தம் என்ன? வாழ்வின் அடிப்படைத் தேவைகள் பெறுமளவு சம்பாதித்தால் போதாது. நவீன காலத்தின் தேவைக்கதிகமான வசதி வாய்ப்புகள் எல்லாம் பெற்று, கண்ணில் பட்டதெல்லாம், நினைத்ததெல்லாம் வாங்குமளவு செல்வம் பெற்றிருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். தாங்கள் அப்படி இருப்பது மட்டுமல்லாமல், தங்கள் பிள்ளைகளையும் அவ்வாறே வளர்க்கின்றனர். திரு. கதிர் அவர்கள் தன் பதிவில் கூறியிருந்தது போல பசிக்கு உண்ணும் வாழ்வு இல்லை இவர்களது. இந்த மனப்பான்மையில் வளரும்போது ஒருவேளை பிற்பாடு வறுமையை, பசியை எதிர்கொள்ள வேண்டி வந்தால் துவண்டு போகிறார்கள். இந்நிலையில் குடும்பத்தோடு தற்கொலை முடிவு எடுக்கவும் செய்கின்றனர் சிலர்.

முந்தைய காலங்களில் ஒரு குடும்பத் தலைவர் தன் வாழ்நாளில் சொந்தமாக ஒரு வீடு கட்டி முடிப்பதே தன் லட்சியமாகக் கொண்டு, சிறுகச் சிறுகச் சேர்த்து வருவார். மனைவி, மக்கள் என்று மொத்தக் குடும்பமுமே தங்களால் இயன்ற வரை தங்கள் ஆசைகளை அடக்கிக் கொண்டு அந்தக் கனவு நிறைவேற உறுதுணையாயிருப்பர்.

யோசித்துப் பாருங்கள், நம் காலத்தில் ஒரு பென்சிலோ, பேனாவோ வாங்க நாம் நம் பெற்றோரிடம் எவ்வளவு தவம் இருந்திருப்போம்? ஒரு மாசம் (??!!) கூட ஆகல, அதுக்குள்ள அடுத்ததா? என்பது போன்ற எத்தனைப் புலன் விசாரணைகளுக்குப் பின் நமக்கு அந்தப் பொருள் சாங்ஷன் ஆகும்? அதில் கிடைக்கும் மகிழ்ச்சியிலேயே அப்பொருளைப் பொன் போலப் பாதுகாப்போம். ஆனால் இன்று, நம் பிள்ளைகளுக்கு, முதலிலேயே 12 பென்சில்கள் அடங்கிய பெட்டிகள் சிலவற்றை வாங்கிக் கொடுத்து விடுகிறோம். வலியில்லாமல் கிடைப்பதால், அவர்களும் அதை முடிந்தவரை வீணாக்குகிறார்கள். ஒரு நாள் உறவினர் வீட்டுப் பெண்ணின் பாக்ஸில் பார்த்தேன், ஏழெட்டு பென்சில்கள். அதுமட்டுமல்ல, வீட்டில் தடுக்கி விழுந்த இடமெல்லாம் பென்சில்கள் மற்றும் இதர பொருட்கள்!! (இதில் பாதிக்கப்படும் சுற்றுச்சூழல் பற்றி எழுத ஆரம்பித்தால், அது ஒரு தனிப் பதிவு அளவு ஆகிவிடும்.) ஆக, செல்வச் செருக்குடன் செல்லமாகவும் வளர்க்கப்படுவதால் குணம் மாறும் குழந்தைகள் லேட் மேரேஜின் ஒரு விளைவு எனலாம்.

பணம்/ சொத்து சேர்ப்பதற்காகத் திருமணத்தைத் தள்ளிப்போடும் இளைஞர்களில் இயற்கையான தமது உடல் வேட்கையை அடக்க முடியாதவர்கள் சிலர் என்ன செய்வார்கள்? நெட் சாட்டிங், தவறான தொடர்புகள், முறையற்ற உறவுகள், கேர்ள் ஃபிரெண்ட், லிவிங்க் டுகெதர், உடல்நலத்தைக் கேடாக்கும் பழக்கவழக்கங்கள் என்று பல வழிகளில் சீரழிகிறார்கள். இது மற்றொரு விளைவு!!

ஒருவழியாகக் கல்யாணம் செய்த பிறகும், குழந்தையைக் கவனிக்க ஆளில்லை, பிரமோஷன் வர்ற சமயம் என்பது போன்ற காரணங்களால் குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட்டு், கிட்டத்தட்ட பேரன், பேத்தி எடுக்கும் வயதில் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதால் வரும் ”தலைமுறை இடைவெளி” (”ஜெனரேஷன் கேப்”) வேறு!!

என்னதான் சொல்ல வர்றே, குழப்பாம சீக்கிரம் சொல்லுங்கறீங்களா? பெரியவர்கள் சொல்வார்கள், “அதது காலாகாலத்தில் நடக்க வேண்டும்” என்று. அதுபோல, ஆணோ, பெண்ணோ, அந்தந்த வயதில் திருமணம் செய்துகோண்டு, வசதிகளை மேம்படுத்தும் வழிகளை குடும்பத்தினரின் உறுதுணையோடு செய்வது நல்லது. சரிதானே?

வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய இளமைக் காலத்தில் திருமணம் செய்துகொண்டு, நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போதே குழந்தைப் பேறு அடைவது நல்லது. சிறு வயதில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகமாக இருக்கும். இளவயது என்றால் குழந்தை பெறுவதில் அதிகச் சிரமும் இருக்காது. இன்று குடும்பநல கோர்ட்டுகளிலும், குழந்தைப்பேறு மருத்துவமனைகளிலும் இருக்கும் கூட்டங்களும் இதைத்தானே சொல்லாமல் சொல்லுகின்றன!!

நாம் மட்டுமல்ல, நம் பெற்றோர் திடகாத்திரமாக இருக்கும்போதே குழந்தை பெற்றுக் கொண்டால், குழந்தை வளர்ப்பில் அவர்களால் ஆதரவாக இருக்க முடிவதுடன், பேரக்குழந்தைகளுடன் சுவாரசியமாகப் பொழுதுபோக்க முடியும். அதோடு, நமது பேரக்குழந்தைகள் வரும்போது நாமும் அவர்களுக்கு ஈடுகொடுக்க இளவயதினராக இருக்கலாமே!! முன்னெல்லாம், “நான் எங்க தாத்தா, பாட்டிட்டதான் வளர்ந்தேன்”, “ஒவ்வொரு லீவுக்கும் நான் தாத்தா, பாட்டிட்ட போயிடுவேன்” என்றெல்லாம் நிறையபேர் கூறக் கேட்டிருப்போம். நம்மை வளர்த்தெடுக்குமளவு அவர்கள் அதிக வயதானவராக இல்லாமல், ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால், இப்ப நம் பிள்ளைகளை சில நாட்கள் கூட நம் பெற்றோருடன் தனியாக விட மிகவும் யோசிக்கிறோம், “அப்பாவுக்கு ஏற்கனவே பிரஷர் இருக்கு; அம்மாவுக்கு மூட்டுவலி உண்டு. இவனை எப்படி தனியா சமாளிப்பாங்க” என்றெல்லாம் கவலைப் படுகிறோம்.

யோசிங்கப்பா!!

கொசுறுத் தகவல்: தமிழ்நாட்டில் திருமணமாகாத ஏழைப்பெண்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.20,000 வழங்கப்படுகிறது. யு..ஏ.இ.யில் இதேபோல திருமண உதவித்தொகை 70,000 திர்ஹம் (கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய்) வழங்கப்படுகிறது. ஆனால், ஏழைப்பையன்களுக்கு!!

Post Comment

52 comments:

S.A. நவாஸுதீன் said...

பதிவு பெருசா இருந்தாலும் சொன்ன விஷயமும் பெருசுதான். பாராட்டுக்கள்

Rithu`s Dad said...

சரியான அனுகுமுறை தான்.. ஆனால் இப்பொழுது எல்லாம் பெண் கேட்டு சென்றால் பெண் மற்றும் அவர் குடும்பத்தினர் முதலில் பார்ப்பது பண பலம் தானே? .. நல்ல வேலையில் இருந்தும் இன்னும் எத்துனை பேர் 25 வயதிலிருந்து பெண் தேடி தேடி 32 வரை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.. அதிலும் வெளி நாட்டு மாப்பிள்ளைகள் என்றால்.. சுத்தம்.. அவங்களா “சாட்டிங்” “லவ்” என்று எதாவது செய்தால் தான் உண்டு.. இருவர் “பெற்றோர்களின்” மன நிலையும் மாறவேண்டும்.. !!! சரி தானே??

நாஸியா said...

மாஷா அல்லாஹ் சகோதரி.. ரொம்ப விரிவாக ஆராய்ந்து அலசி இருக்கிரறீர்கள்... நிச்சயம் இதை முன்னனி வார இதழ்களில் பிரசுரிக்கலாம்..

நீங்கல் சொல்வதெல்லாம் முற்றிலும் உண்மை..100% உடன்படுகிறேன்.. ஆனால் பல பெண்களின் திருமணம் வரதட்சினையாலே தடை படுகிறது.. என்ன செய்ய? :(

பிறகு, இந்த செட்டில் ஆனதும் கல்யாணம் செய்துக்கொள்வது, செட்டிசல் ஆனதும் பிள்ளை பெற்றுக்கொள்வது அல்லாஹ்வின் மீது குறைந்த அளவே உள்ள் ஈமானை காட்டுகிறது..

செட்டில் ஆகிறோமோ இல்லையோ, நமக்கான உணவை வழங்குபவன் அல்லாஹ் ஒருவனே.. அவன் மீது தவக்கல் வைத்து அது அது அந்த அந்ந்த காலத்தில் நடப்பதே நபி வழி.. :)

pudugaithendral said...

நம்ம அலசிகாயப்போட்டிருக்கீங்க.

நிஜாம் கான் said...

நல்ல பதிவு. ஆனால் கொஞ்சம் நீளத்தை குறைச்சிருக்கலாம். இந்த இடுகை முழுக்க என்னையத் தாக்குறமாதிரி இருக்கே?????? அப்டியா?

அ.மு.செய்யது said...

ஆஹா.....இவ்வளவு மேட்டர் இருக்கா ???? இந்த பதிவை பரிசீலனைக்கு எடுத்து
கொள்கிறேன்...பிரிண்ட் அவுட்டும் எடுத்துக்கறேன்.

திடீர்னு மாறிட்டனு யாராவது கேட்டா ஹூசைனம்மா தான் சொன்னாங்கன்னு உங்கள கோர்த்து
விட்டுட்றேன்

வரட்டுமா ?? ரைட்டு !!!.

அது ஒரு கனாக் காலம் said...

அருமையான பதிவு .... காலத்தை மட்டும் பின்னால தள்ள முடியாது ... பெருமூச்சு தான் விடலாம்.

ஒரு பதிவுல ரொம்ப நாள் முன்பு படித்தது , சே படிக்காமலே இருந்திருந்தால் .... ஊரை விட்டு போக வேண்டாம், உறவினர்களை பிரிய வேண்டாம் , நோ டென்ஷன், நோ வொரீ....

தராசு said...

ஹலோ,

என்னதான் சொல்ல வர்றீங்க??

காலாகாலத்துல நடக்க எங்க விட்றாய்ங்க????

லெமூரியன்... said...

நல்ல விஷயத்தைதான் தொட்ருகீங்க...ஆனா இங்க ஒரு பெண் பார்க்கும் போதே பையன் எவ்ளோ சம்பளம் வாங்கறான் என்றே பேச்சை ஆரம்பிக்கிறார்கள்....அதை விட என் அம்மா காலத்ல இருக்ற காசை வச்சு குடும்பம் நடதரளவுக்கு பக்குவம் இருந்தது....இப்போ உள்ள தலைமுறை பெண்ணோ அல்லது ஆணோ அந்த பக்குவமும் இல்ல......சமுதாயமும் அப்டி பக்குவத்தோட இருக்கறவங்கள பொழைக்கத் தெரியாதவனு பட்டம் கொடுக்குது....ஆகக் கூடி பார்க்கும் போது பணமே பிரதானம் ஆகிவிட்ட காரணத்தால் சமுதாயத்தின் பார்வைக் கூட மாறிவிட்டது....

ஹுஸைனம்மா said...

//தராசு Says:
18/11/09 15:22

காலாகாலத்துல நடக்க எங்க விட்றாய்ங்க????//

காலாகாலத்துல நடக்காமலா பத்து விதிகள் எழுதியிருக்கீங்க?

ஹுஸைனம்மா said...

S.A. நவாஸுதீன் Says:
18/11/09 10:32

பாராட்டுக்கள்//

நன்றி நவாஸ்.

ஹுஸைனம்மா said...



// Rithu`s Dad Says:
18/11/09 11:46

சரியான அனுகுமுறை தான்..//

நன்றி.

//நல்ல வேலையில் இருந்தும் இன்னும் எத்துனை பேர் 25 வயதிலிருந்து பெண் தேடி தேடி 32 வரை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.. அதிலும் வெளி நாட்டு மாப்பிள்ளைகள் என்றால்.. சுத்தம்..//

நீங்க சொன்னமாதிரி பணபலம் மட்டும் பார்க்கிறார்கள் என்றால் இந்தப் ப்ரச்னையே இருக்காதே.. குணமும் பார்ப்பதினால்தான் இந்நிலை.

நீங்க ரீத்து அப்பாதானே, அதனால இந்த ஸ்டேஜிலெல்லாம் தாண்டி வந்துட்டீங்கள்ல?

ஹுஸைனம்மா said...


நாஸியா Says:
18/11/09 12:06

மாஷா அல்லாஹ் சகோதரி.. ரொம்ப விரிவாக ஆராய்ந்து அலசி இருக்கிரறீர்கள்...

நன்றி நாஸியா.

ஆனால் பல பெண்களின் திருமணம் வரதட்சினையாலே தடை படுகிறது.. என்ன செய்ய? :(

இப்ப வரதட்சணையை விட ஆடம்பரமான திருமண விழாக்கள், சம்பிரதாயங்களில்தான் அதிகப் பணம் செலவழிகிறது.

//செட்டில் ஆகிறோமோ இல்லையோ, நமக்கான உணவை வழங்குபவன் அல்லாஹ் ஒருவனே.. அவன் மீது தவக்கல் வைத்து அது அது அந்த அந்ந்த காலத்தில் நடப்பதே நபி வழி.. :)//

ஆமாம் நாஸியா.

ஹுஸைனம்மா said...

புதுகைத் தென்றல் Says:
18/11/09 12:28

நம்ம அலசிகாயப்போட்டிருக்கீங்க.

நல்லா வெளுத்து இருக்கா அக்கா? ;-D

ஹுஸைனம்மா said...

இப்படிக்கு நிஜாம்.., Says:
18/11/09 12:30

நல்ல பதிவு.//

நன்றி நிஜாம்.

//இந்த இடுகை முழுக்க என்னையத் தாக்குறமாதிரி இருக்கே?????? அப்டியா?//

அப்படியும்தான். :-))

ஹுஸைனம்மா said...

//அ.மு.செய்யது Says:
18/11/09 13:35

ஆஹா.....இவ்வளவு மேட்டர் இருக்கா ???? ...திடீர்னு மாறிட்டனு யாராவது கேட்டா ஹூசைனம்மா தான் ொன்னாங்கன்னு உங்கள கோர்த்து விட்டுட்றேன். //

உங்கள மாதிரி வீட்ல எப்படிச் சொல்லன்னு தெரியாம முழிக்கிறவங்க இப்படித்தான் பழியைப் போட யாரு கிடைப்பான்னு பாப்பீங்க. எப்படியோ நல்லது நடந்தா சரிதான்.

ஹுஸைனம்மா said...

//அது ஒரு கனாக் காலம் Says:
18/11/09 14:33

அருமையான பதிவு .... //

நன்றி கனாக்காலம்!!

எம்.எம்.அப்துல்லா said...

good article. hats off :)

அன்புடன் அருணா said...

அப்ப்பாஆஆஆஆடா...எவ்வ்ளோ பெரீய பதிவு!

ஹுஸைனம்மா said...

லெமூரியன்... Says:
18/11/09 15:27

நல்ல விஷயத்தைதான் தொட்ருகீங்க...//

நன்றி!!

//அதை விட என் அம்மா காலத்ல இருக்ற காசை வச்சு குடும்பம் நடதரளவுக்கு பக்குவம் இருந்தது....இப்போ உள்ள தலைமுறை பெண்ணோ அல்லது ஆணோ அந்த பக்குவமும் இல்ல......//

அந்த அம்மா வளர்த்த பொண்ணுகிட்ட ஓரளவாவது அந்தப் பக்குவம் இருக்கும்தானே?

//ஆகக் கூடி பார்க்கும் போது பணமே பிரதானம் ஆகிவிட்ட காரணத்தால் சமுதாயத்தின் பார்வைக் கூட மாறிவிட்டது....//

அந்தப் பார்வையை மாற்ற முயலும் ஒரு ஆதங்கம்தான் இந்தப் பதிவு!!

ஹுஸைனம்மா said...

//எம்.எம்.அப்துல்லா Says:
18/11/09 16:10

good article. hats off :)//

Thanks!! :-D

ஹுஸைனம்மா said...

//அன்புடன் அருணா Says:
18/11/09 16:14

அப்ப்பாஆஆஆஆடா...எவ்வ்ளோ பெரீய பதிவு!//

என்ன செய்ய அருணா, உங்களை மாதிரி ஷார்ட் & ஸ்வீட்டா நாலு வரில கவிதையா எழுத வரமாட்டேங்குது!! நமக்குப் பக்கம் பக்கமா கட்டுரைதான் எழுத வருது!!

புரிஞ்சுதா இல்லையா? வருகைக்கு நன்றி.

விக்னேஷ்வரி said...

ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க.

Prathap Kumar S. said...

என்னங்க இப்படி போட்டு குழப்பிட்டீங்க...
கல்யாணம் பண்ணுன்னு சொல்றீங்களா பண்ண வேண்டாம்னு சொல்றீங்களா,
வரதட்சனை கேட்ககூடாதுன்னு சொல்றீங்களா? தந்தா வாங்க கூடாதுன்னு சொல்றீங்களா?

நீங்க சொன்ன பல விசயங்கள் உண்மைதான். சுந்தர் சார் சொன்னமாதிரி காலத்தை பின்தள்ள முடியாது. இது ஒரேஅடியாக மாறக்கூடிய, மாற்றக்கூடிய விசயமல்ல.

ஆமா நீங்க மொக்கை பதிவுதான் போட்டுட்டு இருந்தீங்க? எப்பருந்து உருப்படியான விசயங்களை பத்தி பதிவு போட ஆரம்பிச்சீங்க???

ஹுஸைனம்மா said...

//நாஞ்சில் பிரதாப் Says:
18/11/09 19:17
என்னங்க இப்படி போட்டு குழப்பிட்டீங்க... //

நாஞ்சில்காரங்களுக்கு புரியவைக்க கொஞ்சம் கஷ்டம்தான்.


//ஆமா நீங்க மொக்கை பதிவுதான் போட்டுட்டு இருந்தீங்க? எப்பருந்து உருப்படியான விசயங்களை பத்தி பதிவு போட ஆரம்பிச்சீங்க???//

ஹலோ, ஒன்லி மொக்கை போடுறதுக்கு நான் ஒண்ணும் நாஞ்சில்காரி இல்லை.

(அய்யோ, எவ்ளோ சந்தோஷமாருக்கு இந்த நாஞ்சில்காரங்களை ஓட்டுறது!!)

நன்றி பிரதாப்.

ஹுஸைனம்மா said...

//விக்னேஷ்வரி Says:
18/11/09 17:49
ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க.//

நன்றி விக்னேஷ்வரி. :-D

ஸாதிகா said...

அருமையான அலசல்.

ஹுஸைனம்மா said...

ஸாதிகா Says:
19/11/09 09:27

//அருமையான அலசல்.//

நன்றி அக்கா.

Prathap Kumar S. said...

//நாஞ்சில்காரங்களுக்கு புரியவைக்க கொஞ்சம் கஷ்டம்தான்

அவ்வ்வ்வ்வ்...

//ஹலோ, ஒன்லி மொக்கை போடுறதுக்கு நான் ஒண்ணும் நாஞ்சில்காரி இல்லை. (அய்யோ, எவ்ளோ சந்தோஷமாருக்கு இந்த நாஞ்சில்காரங்களை ஓட்டுறது!!) //

தப்புபண்ணீட்டிங்க மேடம். இதோட விளைவுகள் பயங்கரமா இருக்கும். எங்கப்போகப்போறீங்க... எங்கூருக்குத்தானே வந்தாகணும்...

பாவா ஷரீப் said...

// நல்ல ஏரியாவில ஒரு வீடு, கொஞ்சம் பேங்க் பேலன்ஸ் இப்படி செட்டில் ஆனபிறகுதான் கல்யாணம் //

என்னக்கா பண்றது என்னோட லட்சியம் இத நோக்கி தான் போய்க்கிட்டு இருக்கு.


// இப்படி எல்லாம் சரியா வந்து, கல்யாணம் பண்ணும்போது, ஆணுக்கு 30 வயது தாண்டிவிடுகிறது. பெண் முப்பது வயதைச் சில வருடங்களில்/மாதங்களில் //

இத நெனச்சா ரொம்ப வருத்தமா இருக்கு,

--------------நல்ல பதிவு -------------

ஹுஸைனம்மா said...

//நாஞ்சில் பிரதாப் Says:
19/11/09 21:05

தப்புபண்ணீட்டிங்க மேடம். இதோட விளைவுகள் பயங்கரமா இருக்கும். எங்கப்போகப்போறீங்க... எங்கூருக்குத்தானே வந்தாகணும்...//

இதெல்லாம் சமாளிக்க தில் இல்லாமலா உங்க ஊர்ல 15 வருஷமா குப்பை கொட்டிகிட்டு இருக்கோம்? நான் தின்னவேலிக்காரியாக்கும், மறந்துடாதீங்க!!

ஹுஸைனம்மா said...

//கருவாச்சி Says:
19/11/09 21:53

--------------நல்ல பதிவு -------------//

நன்றி கருவாச்சி!! சீக்கிரமே உங்கள் லட்சியங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்!!

பாத்திமா ஜொஹ்ரா said...

அக்கா,நல்ல சிந்தனை.எல்லாம்வல்ல அல்லாஹ்,உங்களுக்கு நற்பாக்கியங்கள் தருவானாக.உங்கள் எழுத்து மூலம் எல்லாரும் பயன்பெறட்டுமாக,ஆமீன்..

Rithu`s Dad said...

/////நல்ல வேலையில் இருந்தும் இன்னும் எத்துனை பேர் 25 வயதிலிருந்து பெண் தேடி தேடி 32 வரை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.. அதிலும் வெளி நாட்டு மாப்பிள்ளைகள் என்றால்.. சுத்தம்..//

நீங்க சொன்னமாதிரி பணபலம் மட்டும் பார்க்கிறார்கள் என்றால் இந்தப் ப்ரச்னையே இருக்காதே.. குணமும் பார்ப்பதினால்தான் இந்நிலை.

நீங்க ரீத்து அப்பாதானே, அதனால இந்த ஸ்டேஜிலெல்லாம் தாண்டி வந்துட்டீங்கள்ல?////

இருவீட்டாரும் முன்பெல்லாம் “பணம்” கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் “குணத்திற்க்காக” அனுசரித்துக்கொண்டவர்கள்.. இப்பொழுது அப்படியே தலைகீழாக மாறிவிட்டார்களே... !?

ஆமா மூன்றுவயது ரித்துவின் அப்பாதான் நான்..!! ஆனால் நாங்கள்லாம் ”இந்த” கஷ்டத்தை வளர்த்து,படிக்கவைச்சு ஆளாக்கின அப்பா அம்மாக்கு குடுக்கவில்லையே..!!

புகழன் said...

இப்பொழுதுதான் முதல் முறையாக உங்கள் பதிவைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் பதிவு இப்ப ரெம்ப தேவையான மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி அலசிய பதிவு.
இது போல் தொடர்ந்து எழுதுங்கள்

புகழன் said...

ஆனால் கொஞ்சம் கொஞ்சமா எழுதலாமே
ஏன் இவ்ளோ................ பெரிசா பதிவு போடுறீங்க?

புகழன் said...

அட உங்களோட எல்லாப் பதிவும் இப்படித்தான் ரெம்ப நீ.......ளமா இருக்கு. எல்லாத்தையும் படிக்கலாம்னு போனா ரெம்ப மலைப்பா இருக்கு. அதனால நேரம் கிடைச்சா படிக்கிறேன்.

புகழன் said...

//
வீட்டில் தடுக்கி விழுந்த இடமெல்லாம் பென்சில்கள் மற்றும் இதர பொருட்கள்!! (இதில் பாதிக்கப்படும் சுற்றுச்சூழல் பற்றி எழுத ஆரம்பித்தால், அது ஒரு தனிப் பதிவு அளவு ஆகிவிடும்.)
//

அய்யோ இதற்கு ஒரு தனி பதிவா.........?

இப்பவே அதற்கும் சேர்த்து கமென்ட் போட்டுக்கிறேன்.

“பதிவு நல்லா இருக்கு. சுற்றுச் சூழல் மேல உள்ள உங்க ஆர்வம் எல்லோருக்கும் வரணும்”

புகழன் said...

பதிவை படித்து விட்டேன்
அதற்குத்தான் முந்திய கமென்ட்

ஹுஸைனம்மா said...

//பாத்திமா ஜொஹ்ரா Says:
20/11/09 08:52

அக்கா,நல்ல சிந்தனை.எல்லாம்வல்ல அல்லாஹ்,உங்களுக்கு நற்பாக்கியங்கள் தருவானாக.உங்கள் எழுத்து மூலம் எல்லாரும் பயன்பெறட்டுமாக,ஆமீன்..//

நன்றி ஃபாத்திமா!!

ஹுஸைனம்மா said...


//Rithu`s Dad Says:

21/11/09 14:12

இருவீட்டாரும் முன்பெல்லாம் “பணம்” கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் “குணத்திற்க்காக” அனுசரித்துக்கொண்டவர்கள்.. இப்பொழுது அப்படியே தலைகீழாக மாறிவிட்டார்களே... !?

ஆமா மூன்றுவயது ரித்துவின் அப்பாதான் நான்..!! ஆனால் நாங்கள்லாம் ”இந்த” கஷ்டத்தை வளர்த்து,படிக்கவைச்சு ஆளாக்கின அப்பா அம்மாக்கு குடுக்கவில்லையே..!!//

பணத்திற்குச் சிலரால் அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்பது உண்மைதான்; அதற்குத்தான் இந்தப் பதிவு.

ஹுஸைனம்மா said...


//புகழன் Says:

21/11/09 15:57


இந்தப் பதிவு இப்ப ரெம்ப தேவையான மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி அலசிய பதிவு. இது போல் தொடர்ந்து எழுதுங்கள்//

நன்றி புகழன்.


//அட உங்களோட எல்லாப் பதிவும் இப்படித்தான் ரெம்ப நீ.......ளமா இருக்கு. //

நான் என்ன “ஒரு பக்கக் கதை”யா எழுதுறேன்? :-)

//ஆனால் கொஞ்சம் கொஞ்சமா எழுதலாமே//

முயற்சி செய்யறேன். :-)

//அய்யோ இதற்கு ஒரு தனி பதிவா.........? இப்பவே அதற்கும் சேர்த்து கமென்ட் போட்டுக்கிறேன்.//

ஆல் மை டைம், என்னத்தச் சொல்ல?..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான பதிவு ...

பீர் | Peer said...

அடுத்த பதிவு 'செட்டிலானதுக்கப்புறம் மேரேஜ் - 2' வருமா? :)

ஹுஸைனம்மா said...

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) Says:
அருமையான பதிவு ..//

நன்றி செந்தில்.


//பீர் | Peer Says:

அடுத்த பதிவு 'செட்டிலானதுக்கப்புறம் மேரேஜ் - 2' வருமா? :)//

அப்படின்னா, நான் சொல்லவந்தது முழுமையா இல்லைன்னு சொல்றீங்களா? சரி, அடுத்த பார்ட் இன்னும் விளக்கமா போட்டுருவோம். (உங்க விதி அப்படின்னா நான் என்ன செய்யறது?)

இல்ல கிண்டல் பண்றீங்களா? :-(

பீர் | Peer said...

'செட்டிலானதுக்கப்புறம் மேரேஜ் எண் 2' அப்டின்னு சொல்லியிருக்கணுமோ? அவ்வ்வ் :(

Sketch Sahul said...

எனக்கு பொண்ணு பார்க்குற சோக கதையை கேளுங்க ..
பொண்ணு வீட்ல வரதட்சணையா எதுவும் வாங்க கூடாதுன்னு சொல்லிட்டேன், இரண்டு வருசம் ஆச்சு ,
இன்னும் பொண்ணு கிடைக்கல (இத்தனைக்கும் துபைல ENGINEER )
என்னன்னு வீட்ல கேட்டா,ஒண்ணுமே வேண்டான்னு சொல்றாங்களே ,அப்படீன்னா மாப்பிளைக்கு ஏதோ குறை இருக்குன்னு பொண்ணு வீட்ல நினைச்சிக்கிட்டு பொண்ணு கொடுக்க யோசிக்கிறாங்கலாம்
என்னத்த சொல்றது .....

ஷாகுல் said...

என்னக்கா பன்னுறது. பொன்னுகளுக்கு சீக்கிரம் திருமணம் நடத்தி வைக்கும் பெற்றோர்கள் தான் ஆண்பிள்ளைகளுக்கு அவன் செட்டிலானதுக்கப்புறம் கல்யானம் பன்னிவச்சா போச்சினு கிடப்புல போடுறாங்க. நாங்களா வேண்டாமுனு சொல்லுறோம்.

ஷாகுல் said...

//உங்க ஊர்ல 15 வருஷமா குப்பை கொட்டிகிட்டு இருக்கோம்//

அப்போ நீங்க கவர்மெண்ட் எம்பிளாயா? ஆவ்வ்வ்வ் :-D

cheena (சீனா) said...

அன்பின் ஹூஸைனம்மா

நீண்டதொரு இடுகை - செட்டிலானதக்கப்புறம் கல்யாணம் - இது இந்தக்காலப் பசங்க சொல்றது - பொண்னுகளும் தான் - எனக்கு 22ல கல்யாணம் ஆச்சு - அதெல்லாம் அப்ப்போ

ம்ம்ம் - ஆயிரம் காரணம் சொன்னாலும் இன்னிக்கு 25 - 28 சரியான வயது ஆண்களுக்கு - பெண்களுக்கு 22 - 25

என்ன சரியா

நல்வாழத்துகள்

athira said...

ஹூசைனம்மா!!!
நம்பமுடியவில்லையே.. இந்தப்பெரிய புளொக்கிற்று ஓனரா நீங்கள்? இன்றுதான் கண்டேன்.

மிக அருமை, இன்னும் ஒருவரிகூடப் படிக்கவில்லை பின்னூட்டம் அனுப்புகிறேன் ... மீண்டும் வருகிறேன்....

அன்போடு அதிரா.

ஹுஸைனம்மா said...

அட நம்ம அதிரா!! வாங்க வாங்க. உங்களைச் சில நண்பர்களின் பிளாக்குகளில் பார்த்தேன். என் பிளாக்குக்கும் வந்ததற்கு நன்றி. நலம்தானே எல்லாரும்?