Pages

ஒரு சொல்லப்படாத கதை...







1945-ல், பிரதமர் அட்லீ தலைமையில் புதியதாகப் பதவியேற்றுக் கொண்ட பிரிட்டிஷ் அரசு, இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்க முன் வந்தது. அதற்கு முன்னர், இந்தியாவில் மத்திய அரசு எப்படி அமைய வேண்டும் என்று தலைவர்களின் கருத்தை கேட்பதற்காக ஒரு தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. சுதந்திர இந்தியாவின் அரசு எப்படி இருக்க வேண்டும் என்று மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் வரையறுத்திருந்த திட்டமே காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியினரால் - பட்டேல் தவிர மற்ற அனைத்துத் தரப்பாலும் - ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அந்தத் திட்டம், பாதுகாப்பு, வெளியுறவு, போக்குவரத்து ஆகிய மூன்று துறைகளை மட்டும் மத்திய ஃபெடரல் அரசின்கீழ் கொண்டு வந்து, மாநிலங்களுக்கு அதிக சுயாட்சியைப் பெற்றுத் தரும் வகையில் அமைந்திருந்ததுதான் படேலின் எதிர்ப்புக்குக் காரணம். எனினும், தூதுக் குழுவின் முழு ஒப்புதலையும் பெற்று, அத்திட்டத்தின் அடிப்படையில் காங்கிரசும், முஸ்லிம் லீகும் இணைந்து இடைக்கால அரசும் அமைத்தன. அதிலும், தனக்குப் பிடித்த உள்துறையை படேல் முஸ்லிம் லீகுக்குக் கொடுக்க மறுத்த காரணத்தால், நிதித் துறையைக் கொடுக்க வேண்டி வந்தது. அதன் மூலம், இடைக்கால அரசில் முஸ்லிம் லீகின் கை ஓங்க வழிவகுத்தது. அதனால் ஏற்பட்ட பிரச்னைகளே, அதுவரை ஒண்றிணைந்த இந்தியாவை ஏற்றுக் கொண்டிருந்தவர்களையும் பிரிவினைக்கு ஆதரவாகத் தள்ளியது.

அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் வேவலும் சுதந்திர இந்தியா பிளவுபடாத ஒன்றிணைந்த இந்தியாவாகத்தான் இருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசிடம் வலியுறுத்தினார். அதற்காக சுதந்திரத்தைச் சிறிது காலம் தள்ளிப் போட்டாலும் பரவாயில்லை என்ற கருத்து கொண்டிருந்தார். ஆனால், அட்லீயோ அதை ஏற்கவில்லை. ஆகவே, லார்ட் வேவலை நீக்கிவிட்டு, தனக்குச் சாதகமானவரான லார்ட் மவுண்ட் பேட்டனை வைஸ்ராயாக நியமித்தார்.

இந்தியா வந்த மவுண்ட் பேட்டனின் “இந்தியப் பிரிவினை” கருத்தை முதன்முதலில் உவகையோடு ஏற்றுக் கொண்டது வல்லபாய் பட்டேல். பேச்சுத் திறமை மிக்கவரான மவுண்ட் பேட்டன் அடுத்துச் சந்தித்தது, பிரிவினைக்கு கடும் எதிர்ப்போடு இருந்த ஜவஹர்லால் நேருவை. அவர் மதில் மேல் பூனையாக்கப் படுகிறார். அடுத்து கிருஷ்ண மேனன் போன்றோரைப் பதவி ஆசை காட்டி தம் கருத்துக்கு இசைய வைக்கிறார்.

சக தலைவர்கள் மனம் மாறுவதைக் கண்டு வேதனையடைந்த ஆசாத், காந்தியிடம் இதை முறையிட, அவரோ, “பிரிவினை என்று நடந்தால், அது என் பிணத்தின்மீதுதான் நடக்கும்” என்று உறுதியாக கூற, மிகுந்த நம்பிக்கையோடு செல்கிறார். ஆனால், அடுத்த இரண்டே நாட்களில் மவுண்ட் பேட்டன் மற்றும் பட்டேலைச் சந்தித்த காந்தியின் பேச்சில் தெரியும் மாற்றத்தைக் கண்டு அதிர்ந்து போகிறார். பட்டேலின் கருத்தையே காந்தியும் தனது வாதங்களாக முன்வைப்பதைக் கண்டு நம்பிக்கை இழந்துவிடுகிறார்.

மேலும், மௌலானா ஆசாத் அவர்கள் வகுத்துத் தந்த சுயாட்சி திட்டமும் மவுண்ட் பேட்டன் மற்றும் பட்டேலின் வாதங்கள் காரணமாக, காந்தியால் கைவிடப் படுவதைக் கண்டு மனம் நோகிறார். கடைசி வாய்ப்பாக லார்ட் மவுண்ட் பேட்டனைச் சந்தித்து, பிரிட்டிஷ் தூதுக் குழுவினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட மாநில சுயாட்சியையாவது குறைந்த பட்சம் ஏற்க வேண்டுகோள் விடுக்கிறார். அட்லீ மற்றும் மந்திரிசபையிடம் அதுகுறித்துப் பேசுவதாக வாக்களிக்கும் மவுண்ட்பேட்டன், தன் வாக்கை நிறைவேற்றவில்லை.

அவரது விருப்பத்திற்கு மாறாக, இந்தியா பிரிக்கப்படுவதோடு, மாநில சுயாட்சியும் வழங்கப்படவில்லை!! கடைசி வரை, ஏன் இந்திய பிரிவினைக்குப் பின்னரும், அதனை எதிர்த்தவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள்!!

மௌலானா அபுல்கலாம் ஆஸாத் குறித்த எனது முந்தைய பதிவில், இடைக்கால அரசின் செயற்பாடுகள், அரசில் முஸ்லிம் லீகின் கை ஓங்க வழிவகுத்தது என்று குறிப்பிட்டிருந்தேன். அதில் ஏற்பட்ட வேறுபாடுகளே இரு தரப்பினரையும் பிரிவினையை நோக்கித் தள்ளியது எனலாம். அது தொடர்பான சம்பவங்கள் சுவாரசியமானதும், படிப்பினைகள் நிறைந்ததும் ஆகும்!!

சுதந்திரம் வழங்கப்படுவதற்கு முன்பாக, இரு கட்சிகளும் கூட்டாக இணைந்து இடைக்கால அரசு அமைத்தன. முஸ்லிம் லீகிற்கு கொடுக்கப்பட வேண்டிய அமைச்சரவை துறைகள் தேர்வில், உள்துறையை பட்டேல் விட்டுத்தர மறுத்தார்.

தொடர்ந்து, நிதித் துறையை ஒதுக்கலாம் என ஆஸாத்தின் எதிப்பையும் மீறி முடிவெடுத்தது காங்கிரஸ். இதற்குச் சொல்லப்பட்ட காரணம், நிதித் துறையை நிர்வகிக்கும் அளவுக்கு திறமைசாலிகள் அவர்களிடம் இல்லாததால், மறுத்து விடுவர் அல்லது ஏற்றுக் கொண்டாலும் சொதப்பி விடுவர் என்று காங்கிரஸார் சிலர் நினைத்தனர்.

ஆனால், நிதித் துறையின் அதிகாரம் மற்ற எல்லாத்
துறைகளினுள்ளும் நீளும் என்பதை அறிந்த லீக் அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. மற்ற அமைச்சர்கள் தம் துறையில் என்ன செலவு செய்ய வேண்டுமென்றாலும் - ஒரு பியூனை நியமிக்க வேண்டுமென்றாலும்கூட, நிதித் துறையின் ஒப்புதலைப் பெற்றேயாக வேண்டும்!! குறிப்பாக, இதைச் சற்றும் எதிர்பாராத படேல் மிகவும் நொந்து போனார்.

மேலும், இரண்டாம் உலகப் போரின் காலகட்டத்தில், சூழ்நிலையைப் பயன்படுத்தி இந்தியத் தொழிலதிபர்கள் அதிகளவில் வரி ஏய்ப்பு செய்திருந்தனர். அதைக் கண்டறிந்து, வரியைக் கட்டச் செய்வதற்காக நிதி மந்திரி லியாகத் அலிகான் ஒரு கமிஷனை நியமித்தார்.

அடுத்ததாக, அவர் போட்ட பட்ஜெட் திட்டம், பணக்காரர்களை ஏழைகளாகவும், ஏழைகளைப் பணக்காரர்களாகவும் ஆக்கும்படி இருந்தது. இது காங்கிரஸின் கொள்கையை ஒத்திருந்ததால், அதை காங்கிரஸ் எதிர்க்கவில்லை - இருவரைத் தவிர!!

ஆம், வரிக்கான கமிஷனையும், பட்ஜெட்டையும் கடுமையாக எதிர்த்த அந்த இருவர் - சர்தார் பட்டேலும், இராஜாஜியும்!! தொழிலதிபர்களில் அதிகமானோர் இந்துக்களாக இருந்ததால், இவற்றை “இந்துக்களுக்கெதிரான நடவடிக்கை” என அவர்கள் இருவரும் எதிர்த்தனர்!!

இப்படியே இழுபறி நீடித்ததும் இரு தரப்பும் பிரிவினையை ஆதரிக்கும் மனப்பாங்கினை நோக்கித் தள்ளப்பட்டனர்!! ஆசாத் அவர்களோ, கவர்னர் ஜெனரலான வேவலிடம், சுதந்திரம் வழங்குவதைச் சற்றுத் தாமதப்படுத்தினாலும் பரவாயில்லை, பிரிவினை மட்டும் வேண்டாம் என்று வேண்டினார்!!

Rest is history!!

மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் எழுதிய ”இந்திய விடுதலை வெற்றி” நூலில் இருந்து....

Post Comment

சகிப்புத் தன்மையும், ஏற்றுக் கொள்ளலும்.




மீரகத்தில், ஷார்ஜாவில் சர்வதேச புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது.  புத்தகக் கண்காட்சி என்றாலே உற்சாகமாயிருக்கும். படிக்கிறோமோ இல்லையோ, ஆசைக்காவது அஞ்சாறு வாங்கி விடுவதுண்டு. அதிலும், இவ்வருடம் தமிழகத்திலிருந்து பதிப்பகங்கள் தமிழ்ப் புத்தகங்கள் அரங்கு வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டபோது, போயே ஆக வேண்டுமென்று முடிவு செய்தாயிற்று.

தமிழகப் பிரபலங்களான திருமதி. கனிமொழி மற்றும் நடிகர் - சமூக ஆர்வலர் திரு. பிரகாஷ் ராஜ் ஆகியோர் வருவதாகவும் அறிந்து, விபரம் தேடியதில் திருமதி. கனிமொழி பங்குபெறும்  நவம்பர் 2 - வெள்ளிக்கிழமை அன்றுதான் போக வசதிப்பட்டது.

ஷார்ஜா புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு,  முக நூல் நண்பர்கள் சந்திப்பு ஒன்றையும் நடத்திக் கொண்டோம்.

புத்தகக் கண்காட்சியில், இவ்வருடத்திலிருந்து தமிழ்ப் புத்தகங்களும் கிடைக்குமென்பதால் ஆவலோடு அங்கு முதலில் சென்று பார்த்தோம். விலை அதிகமாக இருந்தது என்றாலும், எதிர்ப்பார்த்ததைவிட கொஞ்சம்  குறைவுதான் என்பதால் கொஞ்சமாக அள்ளிக் கொண்டேன். தமிழ்ப் புத்தகங்கள் இல்லாத காலம்வரை,  கை கொடுத்த ஆங்கிலப் புத்தகங்களைப் புறக்கணிக்கக் கூடாது என்பதால் அதிலும் ஒன்றிரண்டு வாங்கிக் கொண்டேன்.

தமிழ்ப் புத்தக அரங்குகளில், நின்றவர்களெல்லாம் தெரிந்த முகங்கள் போலவே இருந்தன. ஃபேஸ்புக்கில்  அல்லது வலைப்பூக்களில் பார்த்திருப்பேனாயிருக்கும் என்றாலும், போய்ப் பேச்சு கொடுக்கும் அளவு தைரியமில்லை. நான் ரொம்பவே கூச்ச சுபாவம்... அட, நம்புங்க... நிசமாத்தான்!! 

அறிவியல் பதிவாளரான திரு. ராஜ் சிவா தம்பதி டிஸ்கவரி பேலஸ் அரங்கிற்கு வந்த அதே நேரம்தான் நானும் போயிருக்கிறேன். ஆனால், அவர்களைக் கவனிக்கவில்லை, அல்லது அடையாளம் தெரியவில்லை. இதோ அவரது பதிவிலிருந்து எடுத்த இந்த புகைப்படத்தில், அவர்களுக்குப் பின்னால் (பர்தா அணிந்து) நிற்பது நானேதான்!! 😀

 

அங்கே ஒன்று, இங்கே இரண்டு, அதிலே மூணு என்று கொஞ்சமாகத்தான் புத்தகங்கள் வாங்கியது போல இருந்ததது. ஆனால், கடைசியில் கணக்குப் பார்த்தால், பட்ஜெட் தாறுமாறாக எகிறியிருந்தது தெரிய வந்தது. ஃபைனான்ஷியல் டிபார்ட்மெண்ட்டில் அப்ஜெக்‌ஷன் வருமோ என்று பயம் வந்தாலும்,  நாம என்ன வாரம் ஒரு சேலை, மாசம் ஒரு கைப்பை, பதினைஞ்சு நாளுக்கு ஒரு செருப்புன்னு ஆன்லைன் பர்ச்சேஸ்ல  வாங்கிகிட்டா இருக்கோம்...  அப்ஜெக்‌ஷன் சொல்லித்தான் பாக்கட்டுமே என்று ஒரு தகிரியம் வந்தது.

டுத்ததாக, திருமதி. கனிமொழி நிகழ்ச்சிக்குப் போனோம். கடந்த வருடம் திரு. ஸ்டாலின் வந்தபோது இருந்த கட்டுக்கடங்காத கூட்டமோ, பரபரப்போ இம்முறை இல்லை. 
நிகழ்ச்சிகள் ஆரம்பித்ததும், நாங்க சக பதிவரான திருமதி.யாஸ்மின் செய்து கொண்டு வந்த கேக்கை, ஃப்ளாஸ்க்கில் கொண்டு வந்த ப்ளாக் டீயுடன் ரசித்து ருசித்தோம்!!

உயர்வு-தாழ்வு பேதம் குறித்துப் பேசிய திருமதி. கனிமொழி, “Tolerance" என்ற பதமே தவறு. Tolerance என்பது நமக்குப் பிடிக்காத ஒன்றைச் சகித்துக் கொள்வது. நம்மோடு ஒன்றாக இணைந்து வாழ்பவர்களை நாம் சகித்துக் கொள்ளக் கூடாது; மாறாக, ஏற்றுக் கொள்ள வேண்டும் - Acceptanceதான் தேவை என்று கூறினார்.
தொடர்ந்து தனது உரையில், தாழ்ந்த குலத்தில் பிறந்த காரணத்தால், ஏகலைவனின் கட்டை விரல் துரோணாச்சாரியாரால் வெட்டப்பட்ட கதையைச் சொன்னார். அர்ஜுனனைவிட சிறந்த வில்லாளி யாரும் இருக்கக்கூடாது என்று, எந்த பாண்டவர்களுக்காக ஏகலைவனின் விரலை வெட்டச் செய்தாரோ, அதே பாண்டவர்களின் துரோகத்தாலேயே துரோணாச்சாரியார் வீழ்த்தப்பட்டார் என்று அவர் கூறிய தகவல் எனக்குப் புதிது.
அந்தச் சமயம் எனக்கு அத்வானிஜி நினைவில் வந்து சென்றார்!!

வர் பேசி முடித்த பின்னர், வெளியே நடந்து வந்து, புல் தரையில் அமர்ந்து ஒரு மீட்டிங் போட்டோம். எல்லாரும் வாங்கிய புத்தகங்களைப் பார்த்து பரிமாறிக் கொண்டோம். ஒருவர் வாங்கிய ஒரு சில புத்தகங்களையே மற்றவர்களும் வாங்கியிருந்தோம்!! அது தவிர பிறர் வாங்கிய மற்ற புத்தகங்களைப் பார்த்து ஏக்கமும் பட்டுக் கொண்டோம்.

அமீரகத்தில் நமது நட்புகளிடையே ஏன் புத்தகங்களைச் சுற்றுக்கு விடக்கூடாது என்றும் கேட்டேன். நல்ல ஐடியாதான், ஆனால் எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை. மேலும், நான் வாங்கிய புத்தகங்களையே அடுத்த வருடத்துக்குள் இன்ஷா அல்லாஹ் படித்து முடிப்பேனா என்று தெரியாத நிலையில், மற்றவர்களின் புத்தகங்களையும் வாங்கி வைத்து என்ன செய்ய? 

அதற்குப் பின்னர் எங்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சகோதரர் ஷபீர் அவர்கள்,  தனது இரு மகள்களையும் மருத்துவம் படிக்க வைத்திருக்கிறார் என்றறிந்து உற்சாகமானேன். அதில் ஒரு மகள், மருத்துவ மேற்படிப்புக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்!! பாரகல்லாஹு லஹும்!!

பெண்களைப் படிக்க வைப்பதை ஊக்குவிக்காத - அதுவும் மருத்துவம் படிக்க வைப்பதை பல காரணங்கள் சொல்லி தடுக்கும் ஒரு சமூகத்தில், இப்படி ஒரு தந்தையா என்று நினைச்சு நினைச்சு ஆச்சரியப்பட்டும், ஆனந்தப்பட்டுகிட்டும் இருக்கேன் இப்பவரை!! அல்ஹம்துலில்லாஹ்!!



Post Comment

அது ஒரு அழகிய நிலாக்காலமாம்!!





குழந்தைப் பருவம், ஓடியாடும் பருவம், குமரி(ரன்) பருவம்... இவற்றைத்தான் அநேகமாக எல்லாருமே தத்தம் வாழ்நாளில் அழகிய நிலாக்காலமெனக் கொள்வோம்!!

கவலை ஏதுமிலா பாலகப் பருவமே மிக இனிது. நாம் நம் கையால் சாப்பாடை எடுத்து உண்ணக்கூடத் தேவையிலா காலம். நேரங்காலத்தில் கணவனுக்கு மனைவி உணவு பரிமாறி பணிவிடை ( :-D ) செய்கிறாரோ இல்லையோ, குழந்தைக்குத் தாய் மணியடித்தால் சோறு படைக்கும் காலம் அது.

காண்பதெல்லாம் இனிதாகத் தெரியும் குமரப் பருவமோ அதனைவிட இனிது. எதிர்காலம், அது கொண்டுவரக்கூடிய கவலைகள், சுமைகள் என்று எதுகுறித்தும் கவனம் கொள்ளாமல், நண்பர்களே உலகம் என வாழ்ந்த சுகமான பருவம்.

திருமணமான புதிதில் இதைவிட இனிமை வாழ்வில் உண்டோ என்று நினைத்த (காலமாகிவிட்ட) காலம். இந்த இனிமையும், ரசனையும், சுதந்திரமும் இனி நம் வாழ்நாள் முழுதும் நீடிக்கும் என்று நம்ம்ம்ம்பிய அப்பாவிக் காலம்!!

சுகமான சுமையைக் கருவில் ஏந்தி, பின்னர் அப்பூங்கொத்தைக் கையில் ஏந்தி, ஈங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்தேன் எனப் பெருமை கொண்ட காலம்.

ப்படி ஒவ்வொரு பருவமாகத் தாண்டி வரும்போதெல்லாம், அப்போதைய பருவமே அழகானதாக, மனதுக்குப் பிடித்ததாகத் தோன்றும். ஆனால், அது பாரமான சுமைகளைச் சுமக்கத் தொடங்கும் இந்தப் பருவம் வரைதான்.

அதுவும் பிள்ளைகள் வளர வளர, நம் வயது தேயத்தேய, காலம் கரையக் கரைய, கவலைகள் பிரச்னைகள் வளருங்காலமாகிவிட்டது இப்போது. ஒவ்வொன்றாக சிக்கவிழ்த்து முடித்து வைத்து நிமிரும்போது, அடுத்த சிக்கல் காலைக்கட்டத் தயாராக இருக்கும் காலமிது.

இந்தப் பருவத்தில்தான், நாம் கவலைகளின்றிப் பட்டாம் பூச்சிகளாகத் திரிந்த அந்தக் காலங்களெல்லாம் நம் நினைவுக்கு வந்து, “ஹூம்... அது ஒரு அழகிய நிலாக்காலம்...!!” என்று பெருமூச்சு விட வைக்கும்!!

ம்மிடம் டைம் மெஷினோடு ஒருவர் வந்து, “சரி, நீ அழகிய நிலாக்காலமாக நினைக்கும் அந்தக் காலத்திற்கே உன்னை மீண்டும் அனுப்பி வைக்கிறேன், வா!!” என்று அழைத்தால் இப்போதைய பிரச்னைகளிலிருந்து விடிவு கிடைக்கும் என்று மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்து அவரின் டைம் மெஷினுக்குள் ஓடிவிடுவோமா? இல்லையே, அவரிடமிருந்து தப்பித்து, வேறு பக்கமாகத்தான் ஓடுவோம்!!

எவ்வளவோ மூச்சுமுட்டுமளவு பிரச்னைகள் இருந்தாலும், இந்த நொடியை - நிகழ்காலத்தை விட்டுப் பிரிய மனம் வருவதே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

சிலர், “அந்தக்காலத்துல காற்று சுத்தமாருந்துது; தண்ணி சுத்தமாருந்துது; சாப்பாடும் விஷங்கள் கலக்காம இருந்துது... இண்டர்நெட் கிடையாது... ஸ்மார்ட் ஃபோன்கள் கிடையாது.. அதுதான் ஆரோக்கியமான காலம்...” என்று நீட்டி முழக்கி, “நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை....” என்ற வியக்கியானத்தோடு முடிப்பார்கள்.

அவர்களை மின்சாரம் இல்லாத... அட, குறைந்தபட்சம் ஏசி மட்டும் இல்லாத, ஓவர்ஹெட் டாங்க் இல்லாத, இண்டர்நெட் இல்லாத ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்து வீட்டில் இருக்கச்சொன்னால் அலறி விடுவார்கள்!!

தேபோலத்தான், (என்னைப் போல) இருக்கும் காலத்தைவிட்டு பழையதைப் போற்றுபவர்களும்!! இவர்களேதான், நாளை தத்தம் பேரப்பிள்ளைகளிடம் “நாங்கலாம் அந்தக் காலத்துல...” என்று ஆரம்பித்து.... இந்த - இதே பாரமான காலத்தையும், அதை தான் வெற்றிகரகமாகக் கடந்து வந்ததையும் பெருமையோடு பிரஸ்தாபிப்பார்கள்!!

நிலா வரும் காலமெல்லாம் - நிலா வரும்வரையான காலமும் - அதை நாம் பார்க்க முடிகிற ஒவ்வொரு காலமும் அழகான நிலாக்காலம்தான்!!

தென்ன “#நிலாக்காலம்”? ஏன் சூரியக்காலம் இல்லை? அல்லது நட்சத்திரக்காலம்?

நிலா, அதன் எல்லா அமைப்பிலும் அழகுதான். சிறு பிறையாக இருக்கும்போது, வளர்ந்து அரை வட்டமாக இருக்கும்போது, முழு நிலவாக இருக்கும்போது என, அதன் எல்லாப் பருவங்களிலுமே நிலவு அழகுதான். நிலாவே வராத அமாவாசை இரவுகூட ஒரு விதத்தில் அழகு!! இது நிலாவுக்கு மட்டுமே உள்ள சிறப்பு. அதனாலதான் நிலாக்காலம்!!

வாழ்க்கையும் அதன் எல்லாப்பருவங்களிலும் சிறப்புத்தான்!!





படத்தில்: #காலை நிலா!! இதிலும் நிலாதான் வித்தியாசமானது. இரவுதான் அதற்கானது என்றாலும், பகலில்கூட சில சமயங்களில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்!!   

இரவில் சூரியன் வந்தா அது இரவே இல்லியே!! எட்டிப் பாத்தாக் கூட அது பகல் ஆகிடும். நட்சத்திரத்துக்கு அத்தனை பவர் கிடையாது.


(எப்படி இப்படிலாம்? எனக்கே தாங்கலை.... )

“டீக்கடை”  ஃபேஸ் குழுமத்தில் ” உங்கள் வாழ்வின் நிலக்காலம் எது?” என்ற போட்டிக்காக எழுதியது.

Post Comment

கண்ணுறங்கும் காலம்!!








ஸ்லாமிய வரலாறுகள், ஹதீஸ்கள் வாசிக்கும்போதெல்லாம் அடிக்கடி நம் கண்ணில் படும் ஒரு விஷயம்,   நபி(ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் இரவில் அதிக நேரம் தஹஜ்ஜத் தொழுதார்கள் என்பதுதான். உதாரணமாக, கலீஃபா உமர்(ரலி) அவர்கள், இரவில் மூன்றிலொரு பகுதி முழுதும் தஹஜ்ஜத் தொழுதார்கள் என்று வாசித்த போது ஆச்சரியம் தாளவில்லை எனக்கு!!
ஓர் இரவின் மூன்றிலொரு பகுதி என்பது குறைந்தது இரண்டு மணி நேரம் என்று வைத்துக் கொண்டாலும்எப்படி அவர்களால் அவ்வளவு நேரம் தொழ முடிகிறது என்று யோசிக்கத் தோன்றுகிறதல்லவா?
நமக்கெல்லாம் சுபுஹூ தொழ எழும்பவே மிகக் கஷ்டமாக இருக்கும்.  கட்டாயத்துக்காகத்தான் சுபுஹுவே எழுந்து தொழுகிறோம். இதில் எங்கே தஹஜ்ஜத் தொழ? அப்படியே தொழுதாலும், சுபுஹுவுக்குப் பத்து நிமிஷம் முன் எழுந்து அவசர அவசரமாகத் தொழுமளவுதான் இருக்கிறது நம் நிலை.
அதிலும் உமர்(ரலி) அவர்கள் தஹஜ்த் தொழுவது மட்டுமல்லஇரவின் இன்னொரு  மூன்றிலொரு பகுதியில் நகர்வலமும் சென்று வருவார்களாம்.
அப்படின்னா அவர்கள் இரவில் தூங்குவதே இல்லையோ என்று சந்தேகம் வருமல்லவா? எப்படி அவர்களால்  போதிய தூக்கமில்லாமல் தாக்குப் பிடிக்க முடிகிறது?
ருத்துவ உலகம், ஒரு மனிதனுக்கு ஒரு நாளில் குறைந்த பட்சம் ஆறு - ஏழு மணி நேர தூக்கம் கண்டிப்பாக வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அப்படி இல்லையென்றால், அது பலவித உடல் உபாதைகள் மற்றும் மன நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கடுமையாகக் கண்டிக்கிறது. அது உண்மையே என்று பலரின் அனுபவங்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஒரே ஒரு நாள் சரியாகத் தூங்கவில்லையென்றால் கூட, அடுத்த நாள் பகலில் தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டே இருக்கும். மனம் நிலையாக இருக்காது. எதைப் பார்த்தாலும், யாரிடம் பேசினாலும் எரிச்சல் எரிச்சலாக, கோபமாக வரும். 
எனில், எப்படி நபிகளும், சஹாபாக்களும் தொடர்ந்து போதிய அளவு தூக்கம் இல்லாமல் தாக்குப் பிடிக்க முடிந்ததுஅவர்களால் முடிந்தது நம்மால் ஏன் முடிவதில்லை என்ற கேள்வி மனதைக் குடைந்து கொண்டே இருந்த சம்யத்தில்தான், கீழ்க்கண்ட ஹதீஸ் கண்ணில் பட்டது!!
இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதும்இஷாத் தொழுகைக்குப் பின்னர் பேசுவதும் வெறுக்கத்தக்க செயலாகும்.  568. அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார்.

'
நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.'  Book : 9  ஸஹீஹ்  புஹாரி

இதற்குப் பின்புதான், இப்புதிருக்கு விடை கிடைத்தது.  இஷாவுக்குப் பிறகு பேசக்கூடாதென்றால், உடனே உறங்கிவிட வேண்டும் என்று பொருள்.  இஷா என்பது நமக்கான நாள் முடிந்துவிட்டது என்பதற்கான வரையறை. நமது அனைத்து வேலைகளையும் அத்தோடு முடித்துவிட்டுஉறங்கிவிட வேண்டும்.
அவ்வாறு உறங்கினால், தஹஜ்ஜத் நேரம் வரை தாராளமாக ஆறு முதல் ஏழு மணிநேர தூக்கம் கிடைக்கும்.  தஹஜ்ஜத்திற்கு எழுவது இலகுவாக இருக்கும்.
மருத்துவ ரீதியாகச் சொல்லப்படும் ஏழு மணி நேரத் தூக்கம்என்பதும் இதன் மூலம் சாத்தியப்பட்டு, அறிவியலும், இஸ்லாமும் எப்போது ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்றும் நிரூபணமாகிறது.

சில அறிவியல் ஆய்வுகளும், இரவுத் தூக்கம் எவ்வளவு இன்றியமையாதது என்று வலியுறுத்துகின்றன. உதாரணமாக, இரவு நேரத்தில்தான், நம் உடலின் மிக முக்கியமான மெலடோனின்என்ற ஹார்மோன் சுரக்கின்றது. 

இதைச் சுரக்கும் பீனியல்சுரப்பி, கண்ணோடு இயைந்து செயலாற்றுகிறது. அதாவது கண்ணில் ஒளிபடாவிட்டால் மட்டுமே, இச்சுரப்பி மெலடோனினைச் சுரக்கச் செய்யும். இந்த ஹார்மோன், நம் உடலின் தூக்கம்-விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தைச் சீராக்கவும் செய்வதோடுபெரும் நோய்களான ஹெச்ஐவி, கேன்ஸர் போன்ற நோய்களும் நம் உடலைத் தாக்காவண்ணம் எதிர்ப்பு சக்தியாகச் செயல்படுகிறது. 

இன்ஸுலின்என்ற இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனும் இரவு தூக்கத்தைப் பொறுத்தே சிறப்பாகச் செயல்படும். போதிய தூக்கமின்மை, தாம்பத்திய வாழ்வையும், குழந்தை பிறப்பையும் கூட பாதிக்கும்.  மறதி அதிகரிப்பதும், விரைவில் உடலில் வயதாகிப் போன தன்மைகள் வருவதும்இதய நோய்சர்க்கரை நோய், எதிலும் மனம் ஒன்றி கவனம் செலுத்த முடியாமை,  ஆகியவையும் தூக்கமின்மையின் பின்விளைவுகளே. 

ஏன், தூக்கமின்மை  அகோரப்பசியை உண்டாக்குவதால், உடற்பருமனுக்கும் காரணமாகிறது.  சுருக்கமாக, தூக்கமின்மை பாதிக்காத செயற்பாடுகளே நம் உடலில் இல்லை எனலாம். அதன் தொடர்ச்சியாக நம் குணத்தில் - எண்ணங்களிலும் பாதிப்பு ஏற்படுத்தும். ஆம், போதிய தூக்கமின்மை உடல் பாதிப்புகளை மட்டுமல்லாது, மன நலப் பாதிப்புகளையும் ஏற்படுத்தவல்லது. 

சமீபகாலமாக, தமிழகத்தில் மிக இளவயதினர் - எந்த நோயுமில்லாதவர்கள்கூட - திடீர் திடீரென மரணிப்பதைக் காண்கிறோம். இவ்வாறான திடீர் மரணத்திற்கும், தூக்கமின்மைக்கும் தொடர்பிருக்க வாய்ப்பிருக்கக் கூடும் என்பதை முழுமையாக மறுக்க முடியாது. 

தனால்தான் அல்லாஹ் தனது திருமறையில்பல இடங்களில்  இரவு தூக்கத்திற்கானது  என்று  மீண்டும் மீண்டும்வலியுறுத்தியுள்ளான்.  இதைக்கூடச் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்று அன்று அதை வாசிக்கும்போது தோன்றினாலும், இன்று இதன் அத்தியாவசியம் புரிகிறது. இன்றைய சமூகம் புரிய வைத்துள்ளது. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!! 

30:23இன்னும், இரவில்  உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்;  பகலில்அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. 

 [78:9]   மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.   

25:47] அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்.

தையெல்லாம் அறியாமல், இன்றைய சமூகம் இரவுத் தூக்கத்தையே விட்டொழிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது.  செல்ஃபோன், டிவி, லேப்டாப், பார்ட்டி, சினிமா என்று ஏதாவது ஒன்றில் நம் தூக்கத்தைத் தொலைக்கிறோம்.  

வணக்க வழிபாடுகளில் இரவைச் செலவழித்த நபிமார்கள், கலீஃபாக்கள், ஸஹாபாக்கள், இறைநேசர்கள் வழி வந்த நாம் இன்று, வெற்றுக் கேளிக்கைகளில் நம் இரவுகளை - தூக்கத்தைத் தொலைக்கின்றோம்!! இரவுகளில் அதிகமதிகம் வணக்க வழிபாடுகள் செய்தபின்பும்கூட அவசியமான அளவு தூங்கி, உடலையும் மனதையும் பாதுகாத்துப் போஷித்த நம் முன்னோர்கள் எங்கே?

இரவுத் தொழுகை என்ற ஒன்றே இல்லாமல், இரவுகளில்  விழித்து  வீண் காரியங்களில் ஈடுபட்டு உடலையும் மனதையும் சீர்கெடுத்துப் பாழாக்கிக் கொண்டிருக்கும் நம் தலைமுறை எங்கே?

சமரசம் 16-30 ஏப்ரல் 2018 இதழில் வெளியான கட்டுரை.

Post Comment